About Us
About Green Scapular Matha
புனித கேத்தரீனுக்கு வணக்கத்திற்குரிய மரியாள் காட்சியளித்த ஒன்பது ஆண்டுகள் கழித்து அதே துறவற மடத்திலிருந்த அருட்சகோதரி ஐஸ்டினா பிஸ்குவேபுரு என்பவருக்குத் தோன்றினார். அற்புத தரிசனம் அளித்த அன்னை, ஒளிர்கின்ற பரிசுத்தமான இதயத்தை தனது கைகளில் தாங்கியவாறு தோன்றி , பச்சைவண்ண உத்திரியத்தை அருட்சகோதரி ஐஸ்டினாவுக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து அந்த அருட்சகோதிரிகள் இத்தகைய பச்சை உத்திரியங்கள் தயாரித்து பாரிஸ் நகரில் வினியோகித்தனர். 1870ஆம் ஆண்டின் அருட்தந்தை ஒன்பதாம் பத்திநாதரின் அதிகாரபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்ற பிறகு பிரான்ஸ் நாடெங்கிலும் இது வினியோகிக்கப்பட்டது.
More Details

