என் இறைவா,
உம்மை நான் வணங்கித் தொழுகிறேன்.
என் முழு மனதோடு உம்மை அன்பு செய்கிறேன்.
என்னைப் படைத்துக் கிறிஸ்துவனாக்கிக் கடந்த
இரவில் காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
இந்நாளின் செயல்களையெல்லாம் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
உமது திருவுளத்திற்கு ஏற்றவாறு அடியேன் நடக்க அருள் புரிவீராக.
உம் மேன்மைக்காக என்னைப் பாவத்திலிருந்தும் ஒவ்வொரு
தீமையிலிருந்தும் காப்பீராக. என்னிடமும் என் அன்புக்குரிய
அனைவரிடமும் உம் திருவருள் இருப்பதாக. ஆமென்