பச்சை உத்தரிய மகிமை மாதா ஆலயம்

Back to list
புனித மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம்
...

வானுலக சேனை தளங்களின் அதிபதியே, சதா ஜீவிய அரூபிகளில் மகிமை பிரதாபம் நிறைந்த சம்மனசானவரே, அவர்களிலும் உத்தமமானவரே! உன்னத கடவுளின் மந்திராலோசனை நிர்ணய பெட்டகமே, தேவ சிம்மாசனத்தின் அருகே நிற்கப் பேறுபெற்ற பிரபுவே, தேவ கட்டளைபடியே பரலோக வாசலைத் திறக்கவும், பூட்டவும், அதிகாரம் உள்ள வானவரே, தேவ நீதி சிம்மாசனத்தின் அண்டையில் எங்களைச் சேர்ப்பிக்கும் தூதாதி தூதரே, மரண அவஸ்தை படுகிறவர்களுக்கு உதவி செய்ய தீவிரத்தோடு ஓடிவரும் உபகாரியே, மரித்தவர்களின் ஆத்துமாக்களை அழைத்து கொண்டுபோய் திவ்விய கர்த்தரின் சன்னதியில் சேர்ப்பிக்கும் காவலரே, பலவீனனும் நிர்ப்பக்கியனுமாகிய அடியேனை கிருபாகடாட்சமாய்ப் பார்த்து என் வாழ்நாள் முழுவதிலும் விஷேசமாய் எனது மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச உதவி புரிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்.

                                                                                                                                                                                                                                                                          -ஆமென்